14 ஜூன், 2011

குருப்பட்டம் எவ்வாறு வழங்கப்படும்?

குருத்துவம் (Holy Orders):
கோயில்களில் பூசை (திருப்பலி) செய்யும் தகுதியை கொடுப்பது குருத்துவம் ஆகும். திருமுழுக்கு பெற்ற எந்த ஆணும் குருத்துவம் பெற தகுதி உடையவராவர். பத்து அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து அதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். முதலில் மறைமாவட்ட இறையியல் பள்ளியில் ஒரு வருடமும் அதன் பின்னர் மூன்று வருட பட்டப்படிப்பும் முடிக்க வேண்டும். தொடர்ந்து தத்துவயியல், இறையியல், நிர்வாகம் என்று கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் படித்து தேர்ச்சி பெற வேண்டும். இறுதியாக,

எவ்வாறு வழங்கப்படும்?:
ஆயர் (பிஷப்) தலைமையில் வழக்கமான திருப்பலி நடைபெறும். திருப்பலியின் மத்தியில் சடங்குகள் ஆரம்பமாகும்.

- முதலில் ஒருவர், குருப்பட்டம் பெற இருப்பவர்களை முன் அழைப்பார். குருபட்டம் பெறுபவர் "இதோ வருகிறேன்" என்றுச் சொல்லி முன் செல்வார்.

- நம் சகோதர்களுக்கு குருப்பட்டம் அளிக்க திருச்சபை உங்களை கேட்கிறது என்று பாதிரியார் சொல்லுவார்.

- தகுதி உடையவரா என ஆயர் கேட்பார். அதற்கு, கிறிஸ்தவ மக்களை கேட்டதிலிருந்து தகுதி உடையவர் என சான்றுரைப்பதாக பாதிரியார் பதிலளிப்பார்.

- பின்னர் ஆயர் சில விருப்பக் கேள்விகளை கேட்பார். குருப்பட்டம் பெறுபவர் எல்லா கேள்விகளுக்கும் தாம் விரும்புவதாக பதிலளிப்பார்கள்.

- பின்னர் ஆயருக்கு பணிந்து நடக்க வாக்களிப்பார்கள்.

- சில செபங்கள் செய்த பின்னர், குருப்பட்டம் பெறுபவர் தலையில் ஆயர் இரண்டு கைகளையும் வைப்பார், அருகில் நிற்கும் பாதிரியார்களும் கைகளை வைப்பார்கள், செபிப்பார்கள்.

குருத்துவம் (Holy Orders)

 - குருப்பட்டம் பெறுபவர் திருப்பலியின் போது அணியும் பாதிரியாருக்கான பிரத்தியேக ஆடை அணிவார்கள்.

- ஆயர் சில செபங்கள் செய்த பின்னர், குருப்பட்டம் பெறுபவர் கையில் ரசக் கிண்ணத்தையும், அப்பத் தட்டையும் அளிப்பார்.

இவ்வாறு ஒருவரை பாதிரியாராக ஆயர் திருநிலைப்படுத்துகிறார்.

இதுவரையிலும் கிறிஸ்தவம் கட்டமைத்துள்ள ஏழு அருள்சாதனங்கள் பற்றியும், ஏற்கனவே சொன்னது போல திருமணம் செய்பவர் பொதுநிலையினராகவும் அதாவது கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசியாகவும், குருத்துவம் ஏற்பவர் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆட்சியாளராகவும் இருக்கிறார்கள் என்றும் பார்த்தோம். இனி பொதுநிலையினர் என்ற அடிமட்ட கிறிஸ்தவ விசுவாசிகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறார்கள், அதன் நிர்வாக அமைப்புகள் என்ன என்பதை பற்றி அடுத்த பதிவுகளில் காணலாம்.

படம்: google.com

லேபிள்கள்: , ,

3 கருத்துகள்:

14 ஜூன், 2011 அன்று PM 5:59 க்கு, Blogger Venish Aj கூறியது…

you can avoid that kind of photos..

 
14 ஜூன், 2011 அன்று PM 6:12 க்கு, Blogger பாசிஸ்ட் கூறியது…

@Venish Aj,

ஏன் என்று தெரிந்துக் கொள்ளலாமா?

 
14 ஜூன், 2011 அன்று PM 6:23 க்கு, Blogger Venish Aj கூறியது…

we should not hurt some one directly..like through photos..

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு