29 மே, 2011

இது கிறிஸ்துவின் சரீரம் - ஆமென்.

நற்கருணை (Communion):
கோதுமையில் தயாரிக்கப்படும் வெள்ளைநிற அப்பம் நற்கருணை (நன்மை) என அழைக்கபடுகிறது. இந்த வெள்ளை நிற கோதுமை அப்பத்தில் இயேசுவின் பிரசன்னம் இருக்கிறது என்பதும், பாதிரியாரால் நிறைவேற்றப்படும் திருப்பலியின் (பூசை) போது இந்த அப்பம்  இயேசுவின் உடலாகவும், திராட்சை ரசம்  (ஒயின்) இயேசுவின் இரத்தமாகவும்  மாறுகிறது  என்பதும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் முக்கிய நம்பிக்கைகளுள் ஒன்றாகும்.

முதல் முறையாக ஒருவருக்கு நற்கருணை என்னும் அருள்சாதனம் பெரும்பாலும் கோயில் திருவிழாவின் கடைசி நாளிலோ  அல்லது திருவிழாவின் ஏதாவதொரு நாளிலோ நடைபெறும் ஆடம்பர திருப்பலியில் வழங்கப்படுக்கிறது. (மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கு திருமணத்தின் போது வழங்கப்படும்.) ஏற்கனவே சொன்னதுபோல எந்தவொரு கத்தோலிக்க கிறிஸ்தவ சிறுவரும் எதிர்பார்த்து காத்திருப்பது இந்தவொரு  அருள்சாதனதிற்கு தான். அத்தகைய ஒரு பிரமாண்டப் பொருளாகும். ஒருவர் இதைப் பெறுவதற்கு முன் திருமுழுக்கு மற்றும் பாவமன்னிப்பு பெற்றிருக்க வேண்டும்.

புதுநன்மை (The first Communion)

உச்சி முதல் பாதம் வரை வெள்ளை நிறத்துடனும், கைகளில் அலங்கரிக்கப்பட்ட மெழுகுவர்த்தியுடனும் சிறுவர்கள் கோயிலில் திருப்பலிக்கு தயாராக இருக்க வேண்டும். வழக்கமான நடைமுறையுடன் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருக்கையில்  'திருவிருந்து' வழங்கும் நேரத்தில் புதுநன்மை வாங்கும் சிறுவர்களுக்கு அப்பத்தை திராட்சை ரசத்தில் நனைத்து நாக்கில் கொடுப்பார்கள். அதை கொடுக்கும் போது பாதிரியார் "இது கிறிஸ்துவின் திருவுடல்" என்பார்.  "ஆமென்" என்றுச் சொல்லி பெற வேண்டும்.

அவ்வளவு தான். இப்போது நீங்களும் புதுநன்மை பெற்றுவிட்டீர்கள்! இனிமேல் நீங்கள் உலகத்தின் எந்த மூலை முடுக்கிற்கு சென்றாலும் ஆமென் என்றுச் சொல்லி நன்மை வாங்கிக் கொள்ளலாம்.

பின்னிணைப்பு:
வேளாங்கன்னி, பூண்டி, வில்லியனூர் போன்ற கம்பெனி கோயில்களில் "கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமே நன்மை பெற்றுக்கொள்ளவும்" என பாதிரிகள் ஒலிப்பெருக்கியில் கத்துவதை அங்கே செல்லும் பிற மத மக்களும்  கேட்டிருப்பார்கள்.

சொந்த மத சாமி கைய விரிச்சய பிறகு பக்கத்துக்கு வீட்டு சுவாமிஅடியான் பொண்டாட்டியின் அறிவுரைபடி,  வேளாங்கன்னி மாதா மூலமா ஏசப்பா கிட்ட நம்ம பிரச்சனைய சொல்லி நம்ம பாவத்தையும், கஷ்டங்களையும் தீத்துடலாம்னு அங்க போனா...                                                 பக்கத்து வீட்டு அக்கா சொன்ன மாதிரியே கைல அப்பத்த வச்சிட்டு  "இவரே நம் பாவங்களைப் போக்கும் செம்மறி, இவர தின்னா உங்க பாவம், கஷ்டம் எல்லாம் போய்டும்னு பாதிரியார் சொல்லுறத கேட்டுட்டு...
நாமளும் அத வாங்கி தின்னு நம்ம பாவத்தையும், கஷ்டத்தையும் போக்கிடலாம்னு நினைச்சா....
கொஞ்ச நேரத்துல "இத  வேற யாரும் வாங்க கூடாது, கத்தோலிக்க கிரிச்சவங்க  மட்டும் தான் வாங்கி திங்கணும்" என்று அறிவித்து விடுவதால்....

மறுபடியும் தனது கோயில் கொடைவிழாவில்,  நான் போன வருசமே உனக்கு 2 காப்பு வாங்கி போட்டுருக்கேன். (அழுகை) இன்னும் என் கஷ்டம் தீரல..... "(சாமி - ஆடிக்கொண்டே) அடுத்த கொடைக்குள்ள எல்லாம் சரி ஆகிடும், எனக்கு மால வாங்கி போடு".... திருநீரை அள்ளி தலையில் கொஞ்சம் போட்டு நெற்றியில் ஒரு பூசு பூசி மீதியை கையில் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அழுது கொண்டே வீட்டிற்குச் செல்லும் எத்தனையோ பொன்னம்மாள்களை நேரில் பார்க்கிறோம்.
அவர்களுக்கு கிறிஸ்தவம் சொல்லும் ஒரே பதில், "நீங்கள் பாவிகள். கிறிஸ்துவை நம்பி மதம் மாறுங்கள்."

படம்: google.com

லேபிள்கள்: , ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு