2 ஜூன், 2011

சிறுதாவூர் சீமாட்டியும் இலவச அரிசியும்!

கடந்த திமுக-வின் ஆட்சியில், ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம்  அமல்படுத்தப்பட்டது. அது பற்றி பல்வேறு கருத்துக்கள் படித்தவர்கள் மத்தியில் மின்னஞ்சல்களாகவும், கட்டுரைகளாகவும் இணைய தளத்தில் பறந்து திரிந்தன. அவற்றில்,

இலவசங்களைக் கொடுத்து தமிழக மக்களை உழைக்காதவர்களாக, சோம்பேறிகளாக மாற்றுகிறார் கருணாநிதி என்று உணர்ச்சி வசப்பட்டார்கள். மேலும்,

ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி வாங்கி சாப்பிட்டு கட்டண கழிப்பிடத்தில் கக்கா போக இரண்டு ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று நகைச்சுவை உணர்வோடு கேலி செய்தார்கள். இப்போது,

ஜூன் 1 முதல் இலவச அரிசி திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. அன்று சமூக அக்கறையோடு மின்னஞ்சல்களை அனுப்பியவர்களும், கட்டுரை எழுதியவர்களும் இன்று எவ்வித உணர்சிவசப்பாடும், நகைச்சுவை உணர்வும் இல்லாமல் மேல் கீழ் வாய்களை காட்டன் வைத்து அடைத்து விட்டு அமைதியாக இருப்பதும் கூட சமூக அக்கறை தான் போலும்!

அடுத்து, 

கழக கண்மணிகளின் ஆசைக்கிணங்க ஊழல் நாயகி சிறுதாவூர் சீமாட்டி இப்போது நகைகளை அணிய ஆரம்பித்திருக்கிறாராம்! 

மகன் திருமணத்தில் ஜெயலலிதா 

தான் ஒரு ஊழல்வாதி என்பதை தமிழக மக்கள் மறந்து விட்டாலும் தன்னால் அவற்றை மறக்க முடியாத கொடநாடு அம்மா, ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்றதிலிருந்து இத்தனை நாட்களும் குற்ற உணர்ச்சியினால் நகைகளை ஒதுக்கி வைத்திருந்தார். 

தன்னை  ஊழல்வாதி என்று ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிய கருணாநிதியின் குடும்பமே இப்போது ஊழல் புகாரில் சிக்கி ஊழல் குடும்பம் என்று பெயர் வாங்கிவிட்டதால், "சரி சரி உனக்கும் எனக்கும் சமமா போச்சி" என்ற சமத்துவ நோக்கில்,  "இனிமே நான் பழைய மாதிரி தான்" என்று நிரூபிக்க நகைகளை அணிந்திருப்பது... ஹி ஹி.... சிரிக்க வைக்கிறது!

இனியும், காலணிகள் நிறைந்த அறையைக் காணும் பேறு தமிழக மக்களுக்கு கிடைக்குமா! அம்மா அருள் புரிவாரா?

படம்: google.com

லேபிள்கள்: ,

2 கருத்துகள்:

2 ஜூன், 2011 அன்று PM 2:50 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

poya yow

 
3 ஜூன், 2011 அன்று PM 7:54 க்கு, Blogger வலிப்போக்கன் கூறியது…

அம்மன் இனிமேல்தான் அருள் புரிவாள்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு